
சிவகங்கை: சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட நூலகங்களை ப.சிதம்பரம் நேற்று திறந்து வைத்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயம் நூலகங்கள் இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்ட நிர்வாகம் எம்.பி.நிதியை பெற்று அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மகாத்மா காந்தி பெயரில் நூலகங்களை ஏற்படுத்தி வருகிறது. இதை தமிழகம் முழுவதும் செயல்படுத்த வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்