
சென்னை: சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவராகசெல்வப்பெருந்தகை சிறப்பாக செயல்படுவதால், அவரே அப்பதவியில் தொடர வேண்டும்என்றும் தனக்கு அப்பதவி மேல் விருப்பமில்லை என்றும் சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்ற ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அத்தொகுதியில் கடந்த பிப்.27-ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்