
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு விரைவில் வரும் என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கான ஆயத்த பணி களை மாநிலம் முழுவதும் பழனிசாமி தொடங்கியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியின் உச்ச பதவியாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரு பதவிகள்உருவாக்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி ஆகியோர் பொறுப்பு வகித்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்