
திருச்சி: அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய திமுக எம்.பி.திருச்சி சிவாவின் ஆதரவாளர்களை, நேரு ஆதரவாளர்கள் திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்துக்குள் புகுந்து தாக்கினர். இதுதொடர்பாக திமுக நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சியில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அமைச்சர் கே.என்.நேருவுக்கு, திருச்சி சிவா எம்.பி.யின் ஆதரவாளர்கள் கருப்புக் கொடி காட்டினர். இதனால், ஆத்திரம் அடைந்த நேரு ஆதரவாளர்கள், திருச்சி சிவாவின் வீட்டைதாக்கினர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருச்சி சிவாஆதரவாளர்கள் 10 பேரை போலீஸார் கைது செய்து, செஷன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்