
சென்னை: சட்டப்பேரவைகளில் மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு, ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்க குறிப்பிட்ட காலநிர்ணயம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், அவை முன்னவர் துரைமுருகன், ‘‘சட்டப்பேரவை விதி 92(7)ல் அடங்கியுள்ள ‘ஆளுநரின் நடத்தை’ என்ற பதம், ‘ஆளுநரின் பெயரை விவாதத்துக்கு பயன்படுத்துவது’ என்ற பதம், விதி 287-ல் அடங்கியுள்ள ‘விதி 92(7)-ஐ இடைநீக்கம் செய்ய எடுக்கப்படும் முயற்சி’ என்ற பதம் ஆகியவற்றின் பயன்பாடுகளை நிறுத்திவைத்து, அரசின் தனி தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்