
சென்னை: திரைப்பட இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், ஃபோட்டான் கதாஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநராக பதவி வகித்த நிறுவனம் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி, எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சந்திரசேகரன், கவுதம் வாசுதேவ் மேனன் நேரில் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்