
சென்னை: அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளிப்பதன் மூலம் சமுதாயம் முன்னேறும் என்று ராம கிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னைக்கு நேற்றுவந்த பிரதமர் மோடி, மெரினாகடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டுவிழாவில் கலந்து கொண்டார். அங்கு விவேகானந்தர் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்திய பிரதமருக்கு, ராமகிருஷ்ண மடம் சார்பில் விவேகானந்தர் சிலை பரிசாக அளிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்