
சென்னை: தேசிய கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்க விழா சென்னை பாந்தியன் சாலையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் கண்காட்சி திடலில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநி திஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது:
தேசிய வடிவமைப்பு நிறுவனம்மற்றும் தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை இணைந்து கொடுத்த 500 வடிவமைப்புகளின் அடிப்படையில் உருவான பட்டு, காட்டன்சேலைகள் இங்கு விற்பனைக்குவைக்கப்பட்டுள்ளது சிறப்புக்குரியது. தமிழகம் முழுவதும் உள்ள 1,200 கூட்டுறவு சங்கங்கள் மூலம் பொருட்களை கொள்முதல் செய்து கோ-ஆப்டெக்ஸ் விற்பனை செய்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்