
சென்னை: புதிய குடும்ப அட்டை அல்லதுகுடும்ப அட்டையின் நகல் பெறுவதற்கு ஆன்-லைனில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். குடும்ப அட்டைக்காக வட்டாட்சியர் அலுவலத்திற்கு செல்லவோ, இடைத்தரகர்களை அணுகவோ தேவையில்லை என்று உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: புதிய குடும்ப அட்டைகள், விண்ணப்பித்த 15 நாட்களில் வழங்கப்படும் என்று அறிவித்தோம். அதன்படி, கடந்த 23 மாதங்களில் 11 லட்சத்து 20 ஆயிரம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னுரிமை இல்லாத குடும்ப அட்டைகளில் 12 லட்சத்து 84 ஆயிரம் குடும்ப அட்டைகள் முன்னுரிமை அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் 41 லட்சத்து 68,292 பேர் பயனடைகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்