
சென்னை: சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின்போது பேசியதாவது: இப்போதைய திமுக அரசு லண்டனில் பென்னி குயிக்குக்கு மார்பளவு சிலை அமைத்து திறந்துவைத்துள்ளது.
தற்போது பென்னி குயிக் சிலை கருப்புத் துணியால் மூடப்பட்டிருப்பதாகவும், சிலை சேதமடைந்திருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. சிலை சேதமடைந்திருந்தால் அதை உடனே சரிசெய்ய வேண்டும் என்றும் அரசை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்