
திருவள்ளூர்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிக்காக திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் மில்க் காலனி சாலையில், 200 அடி சாலை முதல் குமரப்பபுரம் முதன்மை சாலை வரை போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
இதன்படி, லாரிகள் மற்றும் கனரக வணிக வாகனங்கள் 200அடி சாலையில் இருந்து மில்க் காலனி சாலையில் செல்ல அனுமதி இல்லை. 200 அடி சாலை சந்திப்பில் இருந்து அசிசி நகர் பிரதான சாலை சந்திப்பு வரை ஒருவழியாக மாற்றப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்