
சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை மேம்படுத்த, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் தொடங்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் சு. அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை சார்பாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோர் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பிரத்யேக சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் செயல்படுத்தபட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள புதிய தொழில் திட்டத்துக்கும், வணிக விரிவாக்கத்துக்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்பட உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்