
சென்னை: மக்களைத் தேடி மேயர் திட்டத்தில் இன்று ராயபுரம் மண்டல பொதுமக்களிடமிருந்து மேயர் ஆர்.பிரியாநேரடியாகக் கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுக்க உள்ளார்.
இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி மேயர்ஆர்.பிரியா, 2023-24-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பொதுமக்களின் குறைகளைக் கண்டறிந்து, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்துத் தீர்வு காணும் வகையில், `மக்களைத் தேடி மேயர்' என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்