Wednesday, May 31, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/31/large/999352.jpgதமிழகம் முழுவதும் பல்வேறு திருட்டில் ஈடுபட்ட 2 திருடர்கள் கைது - 24 பவுன் நகைகள் மீட்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் திருட்டில் ஈடுபட்ட 2 திருடர்களை பிடித்து, அவர்களிடம் இருந்து 24 பவுன் நகைகளை போலீஸார் மீட்டனர். இவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

ராமநாதபுரம் புளிக்காரத்தெருவைச் சேர்ந்த மல்லம்மாள் காளி கோயில் பூசாரி மனோகரன் வீட்டில் மே 14-ம் தேதி மகளின் திருமணத்திற்கு வைத்திருந்த நகைகள், வெள்ளிப்பொருட்களை வீட்டை உடைத்து திருடிச்சென்றனர். இதுதொடர்பாக கேணிக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். கேணிக்கரை ஆய்வாளர் ஆடிவேல் தலைமையில், சார்பு ஆய்வாளர் தினேஷ்பாபு, சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் அய்யனார், பாலமுருகன் மற்றும் போலீஸார் கொண்ட தனிப்படையினர் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் மே 30-ம் தேதி (நேற்று) ஏர்வாடி பகுதியில் தங்கியிருந்த திருவாரூர் மாவட்டம் குடவாசலைச் சேர்ந்த தமிழ்வேந்தன் மகன் முருகானந்தம்(35), சென்னை திருமுல்லைவாயலைச் சேர்ந்த குமார் மகன் ஹரிபிரசாத்(33) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். இவர்கள் பூசாரி மனோகரன் வீடு, மே 25-ம் தேதி ராமநாதபுரம் ராணிசத்திரத் தெருவில் 2 வீடுகள், கீழக்கரையில் ஒரு வீடு ஆகியவற்றில் நகை, பணத்தை திருடியது தெரிய வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...