
சென்னை: போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில், ரேடார் அமைப்பு, நவீன கேமராவுடன் கூடிய ரோந்து வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்இயக்கத்தை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
சென்னையில் விபத்து, போக்குவரத்து நெரிசல், விதிமீறல்களைக்கட்டுப்படுத்த போக்குவரத்து போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் வாகனம் ஓட்டிவருபவர்களை கண்டுபிடிக்க, போக்குவரத்துப் போலீஸாருக்கு புதிதாக 50 ப்ரீத் அனலைசர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்