
சென்னை: வாழ்வில் வெற்றி பெற, மாணவர்கள் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ம் தேதி வெளியாகின. இதில் 94.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுடன், ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடும் நிகழ்வு சென்னை கிண்டி ராஜ்பவனில் நேற்று நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்