
‘2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, ஆட்சிப் பொறுப்பேற்ற 2021 மே 7-ஆம் நாள் முதலே தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளின்படி ஒவ்வொரு திட்டத்தையும் மக்கள் நலனை மனதில் கொண்டு நிறைவேற்றி வருகிறது. இதனால், தமிழகத்தில் 2 ஆண்டு காலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் திமுக ஆட்சி, அனைவருக்குமான வளர்ச்சியை உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சியாக நடந்து வருகிறது’ என்கின்றனர் ஆட்சியாளர்கள். இதையொட்டி அவர்கள் அடுக்கும் சான்றுகள்:
‘தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், இந்த திராவிட மாடல் அரசு தொடர்ந்து முனைப்புக் காட்டி வருகிறது. திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த சமயத்தில் நிலவிய கடுமையான நிதி பற்றாக்குறையை சமாளித்தும், மத்திய அரசு மாநிலத்துக்கு தேவையான அளவுக்கு துணை நிற்காவிட்டாலும், மக்களுக்கு தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது திமுக அரசு.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்