
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை எம்எல்ஏ அலுவலகத்தில் தொகுதி மக்களுக்காக இ-சேவை மையத்தை தொடங்கி வைத்து, கட்டணம் முழுவதையும் தானே ஏற்று கொள்வதாக எம்எல்ஏ தமிழரசி அறிவித்துள்ளார்.
மானாமதுரையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதுதவிர தனியார் பொது சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஒவ்வொரு சேவைக்கும் கட்டணமாக குறிப்பிட்டத் தொகை வசூலிக்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்