
சென்னை/ கோவை/ கரூர்: அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பியின் வீடு, அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக், மின்துறை ஒப்பந்ததாரர்கள், அவர்களது நண்பர்கள், உறவினர்களின் வீடு, அலுவலகம் உட்பட தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, திமுகவினர் வாக்குவாதம், ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனால், சோதனையை அதிகாரிகள் பாதியில் கைவிட்டு,போலீஸில் புகார் கொடுத்தனர்.
அதிமுக ஆட்சியில், போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த விவகாரம், சமீபத்தில் நடந்த கள்ளச் சாராய உயிரிழப்புகள் காரணமாக, தமிழக மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் பதவியில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்