
சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுபான வகைகளை நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் அதற்குரிய அபராதம் விதிப்பதுடன், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் பலர் இறந்த சம்பவங்கள், கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுவது குறித்த புகார்கள் உள்ளிட்டவை தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேற்று ஆலோசனை நடத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்