
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த 30 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடந்த 5 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இந்த ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்றவும், பசுமை வளாகத்தை பராமரிக்கவும் அறிவுரை வழங்கியது. இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிமன்றம் தள்ளி வைத்தது. வேதாந்தா மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்
தில் இன்று (மே 4) மீண்டும் நடைபெறவுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்