
சென்னை: தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்ற 13 ஆயிரம் செவிலியர்கள், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆணையில், 2 ஆண்டுகளுக்குப் பின்னர், அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்