
திருவள்ளூர்: ஆவடியில் நீட் தேர்வு மையத்துக்கு சரியான நேரத்துக்குள் செல்ல முடியாமல் தவித்த மாணவிக்கு ரோந்து வாகனத்தில் உரிய நேரத்துக்குள் அழைத்துச் சென்று தேர்வு எழுத வைத்த போக்குவரத்துக் காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திருத்தணி, பி.ஆர்.பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விநாயகம் -கன்னியம்மாள் தம்பதியின் மகள் ஆனந்தி. இவர் நேற்று முன்தினம் நடைபெற்ற நீட் தேர்வு எழுதுவதற்காக, ஆவடியில் உள்ள தேர்வு மையத்துக்கு வந்தார். ஆனால், வழி தவறி வேறு ஒரு தேர்வு மையத்துக்கு சென்று விட்டார். இதனால், அவரை தேர்வு மையத்துக்கு உள்ள அனுமதிக்க மறுத்து விட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்