
இளையான்குடி: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் சட்டவிரோதமாக மதுவிற்ற 2 மதுக்கூடங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் திறந்தவெளியில் ஊமத்தங்காய் சாறு கலந்த மதுவை விற்ற ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
சாலைக்கிராமம் அருகே மதுக்கூடங்கள் கூடிய 2 அரசு மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் மதுக்கடை திறக்காத நேரங்களில் மதுக்கூடங்களிலும், அதனையொட்டி திறந்தவெளியிலும் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து இந்து தமிழ் திசை நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்