Thursday, May 18, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/19/large/992377.jpgரூ.9.79 கோடியில் 26 ரயில் நிலையங்களில் 528 சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் 26 ரயில் நிலையங்களில் 528 சிசிடிவி கேமரா பொருத்த ரயில்வேநிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உட்பட முக்கியரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு ரயில்நிலையத்திலும் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. இதேபோல, 26 ரயில்நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

இது குறித்து சென்னை ரயில்வேகோட்ட அதிகாரிகள் கூறியதாவது: முதல்கட்டமாக சிந்தாரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், மந்தைவெளி, பசுமைவழிசாலை, கோட்டூர்புரம், கஸ்தூரிபாய் நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி, கோட்டை, பூங்கா, பார்க்டவுன், சேத்துபட்டு, கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் சானிட்டோரியம், மேல்மருவத்தூர் ஆகிய 26 நிலையங்களில் மொத்தம் 528 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...