
சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் மக்களிடம் பழைய பொருட்களை பெற்று, ஏழைகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை நகராட்சியில் தினமும் 13.08 டன் குப்பை சேகரமாகின்றன. இதில் தேவையில்லாத குப்பைகளோடு, மீண்டும் பயன்படுத்தக் கூடிய பாடப்புத்தகங்கள், துணிகள், செருப்புகள், வீட்டு உபயோக பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவையும் மக்கள் தூக்கிவீசுகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்