
கோவை: கோவை மாவட்டத்தில், சாலை விபத்துகளை தடுக்க பிரத்யேக திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக 6 காவல் நிலைய பகுதிகளில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது.
கோவை மாவட்ட காவல்துறை பேரூர், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, கருமத்தம்பட்டி ஆகிய உட்கோட்டங்களுடன் இயங்குகிறது. மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளன. அதிகரித்துவரும் சாலை விபத்துகளை தடுக்க, முக்கிய பகுதிகளில் தடுப்புகள் மற்றும் ரவுண்டானாக்கள் அமைக்க மாவட்ட காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்