
காரைக்கால்: காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி வளாகத்தில் கஞ்சா செடிகள் வளர்ந்திருந்ததாக புகார் கூறப்பட்ட நிலையில், அது முற்றிலும் பொய்யான தகவல் என கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது.
காரைக்கால் மாவட்டம் செருமாவிலங்கை பகுதியில் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இக்கல்லூரி வளாகத்தில் கஞ்சா செடிகள் வளர்ந்திருந்ததாகவும், அதை கல்லூரி நிர்வாகம் ரகசியமாக அழித்து விட்டதாகவும், புதுச்சேரி இந்திய ஊழல்எதிர்ப்பு இயக்கத்தின் தலைவரும், அக்கல்லூரியின் இணைப்பேராசிரியருமான எஸ்.ஆனந்த்குமார் பெயரில் காரைக்கால், திருநள்ளாறு பகுதிகளில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்