
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மணல் கொள்ளை மற்றும் அரசியல்வாதிகளால் இந்த ஆட்சியில் அக்கப்போரு என திமுக ஆட்சியை நேரடியாக விமர்சித்து வருவாய்த்துறையினர் போராட்டம் நடத்தினர்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நரசிங்கபுரம் ஊராட்சி பச்சைமலையில் சட்டவிரோத மண் கடத்தலை தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளரை ஒரு கும்பல் தாக்கியது. இச்சம்பவத்தை கண்டித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலச் செயலாளர் தமிழரசன், மாவட்டத் தலைவர் சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்