
ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு ஒராண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத நகர்ப்புற நல வாழ்வு மையம், சமூக விரோத செயல்கள் நடக்கும் கூடாரமாக மாறி உள்ளதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் இலவச அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ சோதனை, தாய் சேய் சுகாதார சேவைகள் மற்றும் அடிப்படை மருத்துவ சேவைகளுக்காக குடியிருப்புகளுக்கு அருகில் நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்