
திருப்பூர்: திருப்பூரில் நேற்று மாலை பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாலைகளில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பூரில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. திருப்பூர்- பல்லடம் சாலையில் இயங்கி வரும் வணிக வளாகங்களில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகைகள் பலத்த காற்றில் பறந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்