
சென்னை: "31-5-23 அன்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக கோரி ஆளுநர் முதல்வருக்கு கடிதம் எழுதினார்" என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையான அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால், அவர் வகித்து வந்த மின்சாரத் துறையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதலாக ஒதுக்கீடு செய்து, அமைச்சரவையில் மாற்றம் செய்ய ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்தார் என்று தகவல் வெளியான நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அவரது இல்லத்தில் அமைச்சர்கள் உடன் ஆலோசனை நடத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்