
சென்னை: விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக செந்தில்பாலாஜி கூறியபிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத் துறை நடந்து கொண்டது கண்டனத்துக்குரியது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பணம் பெற்றுக் கொண்டு பணி வழங்காதது தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் மற்றும் நண்பர்கள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்