
பழநி: பழநி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தொலைக்காட்சி மூலம் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நாள்தோறும் வாகன உரிமம் பெறுதல், புதுப்பித்தல் மற்றும் பெயர் மாற்றம், புதிய வாகனங்களுக்கு எப்சி, வாகன எண் பெறுதல் உள்ளிட்ட சேவைகளுக்காக பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். இங்கு வரும் மக்களுக்கு அவர்கள் காத்திருக்கும் நேரத்தில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆர்டிஓ ஜெயகவுரி திட்டமிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்