
தஞ்சாவூர்: டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் ஜூன் 16 -ம் தேதி காலை தண்ணீர் திறக்கப்படவுள்ளதாக நீர்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 12-ம் தேதி காலை திறந்து வைத்தார். அணையிலிருந்து தொடக்கத்தில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்பட்ட நிலையில், படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்