
சென்னை: தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் விவகாரத்தில் அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை என அதிருப்தி தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், இதில் உண்மையிலேயே தமிழக அரசுக்கு ஆர்வம் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் தாக்கல் செய்திருந்த வழக்குகள் மீதான விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்