
சென்னை: விளையாட்டுத் துறையின் கேப்டனாக இருந்து அனைத்து வகை விளையாட்டு வீரர்களையும் சாம்பியன்களாக ஆக்கிக் கொண்டு இருக்கிறார் அமைச்சர் உதயநிதி என்று சென்னையில் நடந்த ஸ்குவாஷ் உலகக் கோப்பை நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர் சென்னையில் நடைபெற்றுவந்த நிலையில், இன்று தொடர் முடிவுக்கு வந்தது. இதன் நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய முதல்வர், "தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து, இந்த ஸ்குவாஷ் உலகக் கோப்பையை நடத்திய அனைவருக்கும் முதலில் என்னுடைய மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்