
சென்னை: பயணச்சீட்டு பரிசோதகரால் பேருந்து பயணி தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்க மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை அடையாறில் பணிபுரியும் தினேஷ் என்பவர், கடந்த 30-ம் தேதி கிண்டியில் மாநகர பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்தின் மற்றொரு முனையில் நடத்துநர் இருந்ததாலும், கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தாலும் அவரால் பயணச்சீட்டு எடுக்க முடியவில்லை. இதனால் நடத்துநர் தங்கள் பக்கம் வருவார் என தினேஷ் காத்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்