
சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுத்து, பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
டெல்லியில் அரசு அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் தொடர்பான வழக்கில், மாநில அரசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இந்த தீர்ப்பை ரத்து செய்யும் வகையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசரச் சட்ட மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்