
திருவண்ணாமலை: சிங்கப்பூர், ஜப்பானில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அவர்களுக்கானதா? அல்லது மக்களுக்கானதா என பொருத்திருந்து பார்ப்போம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று (ஜுன் 1-ம் தேதி) மாலை சுவாமி தரிசனம் செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கர்நாடக மாநிலத்தில் மேகேதாட்டு அணை கட்டுவது என்ற நிலைபாடு, கடந்த பாஜக ஆட்சியிலும் எடுக்கப்பட்டது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்த்தது. இப்போது ஆட்சிக்கு வந்த காங்கிரசும், அதே நிலைபாட்டை எடுத்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது யார்?. பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடக மாநில முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்து தடை ஆணையை பெற வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்