
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேட்டரி காரை இயக்காததால் நோயாளிகள் சிரமமடைந்து வருகின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் நடக்க முடியாத நோயாளிகள், அறுவை சிகிச்சை செய்யப்பட்டோர் உள்ளிட்டோரை சக்கர நாற்காலிகள், ஸ்ட்ரெக்சர் போன்றவை மூலம் மருத்துவ பணியாளர்கள் வார்டுகள், ரத்த பரிசோதனை, ஸ்கேன் மையங்களுக்கு அழைத்து செல்வர். சில சமங்களில் நோயாளிகளை அழைத்து செல்வதில் சிரமம் ஏற்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்