
கம்பம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக் கானல், வட்டக்கானல் வனப்பகுதி அருகே அரிசிக்கொம்பன் என்ற காட்டுயானையின் நடமாட்டம் அதிகளவில் இருந்து வந்தது. வனப்பகுதியையொட்டிய கிராமப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளை சேதப்படுத்தி அரிசியை விருப்ப உணவாக உட்கொண்டதால் இந்த யானையை அரிசிக்கொம்பன் என அழைத்து வருகின்றனர்.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததால் இந்த யானைக்கு கடந்த ஏப்.29-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி தமிழக எல்லையான முல்லைக்கொடி வனப் பகுதியில் கேரள வனத்துறையினர் விட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்