
சென்னை: "இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது பா.ஜ.க.வின் சவப்பெட்டியில் அறையப்படும் கடைசி ஆணியாக இருக்கும்" என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது மற்றும் அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சார்பில் இன்று கோயம்புத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக பொருளாளர் டிஆர் பாலு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆ.ராசா எம்பி, முத்தரசன், வேல்முருகன் உள்ளிட்ட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்