
மேட்டூர்: ஜலகண்டாபுரம் மண்டிகளில் இருந்து வாரந்தோறும் வடமாநிலங்களுக்கு 6 லட்சம் தேங்காய் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட தேங்காய் மண்டிகள் உள்ளன. இங்கு எடப்பாடி, நங்கவள்ளி, மேட்டூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதியில் இருந்து விளைச்சல் செய்யப்படும் தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. முழு மட்டையுடன் மண்டிகளுக்கு வரப்படும் தேங்காய்களில், பாதியளவுக்கு நார் உரிக்கப்பட்டு, பின்னர், அவரை லாரிகளில் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது. தற்போது, தேங்காய் வரத்து அதிகரித்துள்ளதால், ஜலகண்டாபுரம் மண்டிகளில் இருந்து வட மாநிலங்களுக்கு அதிக அளவில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்