
மதுரை: அலங்காநல்லூர் பகுதியில் நள்ளிரவில் நடமாடும் ‘குரங்கு குல்லா’ கொள்ளையர்களால் மக்கள் அச்சம் அடைந்தனர். எஸ்பி உத்தரவை அடுத்து அக்கும்பலை பிடிக்க போலீஸார் தீவிர காட்டியுள்ளனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பகுதியிலுள்ள கோவில் பாப்பாகுடி உள்ளிட்ட புறநகர் பகுதியில் ‘குரங்கு குல்லா’ எனும் தொப்பி அணிந்த கொள்ளையர்கள் இரவு நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட முயற்சிப்பது மக்கள் மத்தியில் அச்சத்ததை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதியில் போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்