Tuesday, July 18, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/19/large/1056366.jpgவீட்டில் இருந்தே செவிலியர்கள் சீருடை அணிந்து வரத் தடை - அரசு மருத்துவமனைகளில் உடை மாற்ற வசதி வருமா?

மதுரை: வீட்டிலிருந்தே செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு ‘சீருடை’ அணிந்து வரக்கூடாது என்று மருத்துவக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டநிலையில் அரசு மருத்துவமனைகளில் சீருடை மாற்றுவதற்கு போதுமான அறை வசதி இல்லாததால் செவிலியர்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள், வெள்ளை சீருடை அணிந்து பணிபுரிவார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள், இதுவரை வீட்டில் இருந்தே சீருடைகளை அணிந்து கொண்டு மருத்துமவனைக்கு வருவார்கள். சொற்பமானவர்களே சீருடைகளை கையில் எடுத்து வந்து, மருத்துவமனைக்கு வந்து அவற்றை மாற்றுவார்கள். மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்ற தமிழகத்தில் உள்ள பெரிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 400க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணிபுரிகிறார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...