
கோவை: கோவை மத்திய சிறை, புதியதாக சிறை அமைக்கப்பட உள்ள இடம் ஆகிய இடங்களில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் இன்று ஆய்வு செய்தார்.
கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் 165 ஏக்கரில் கோவை மத்திய சிறை அமைந்துள்ளது. சிறை வளாகத்தில் உள்ள 45 ஏக்கர் நிலம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் செம்மொழிப் பூங்காவுக்காக மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 120 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் கைதிகள் அடைக்கும் இடம், சிறை தொழிற்கூடங்கள், குடோன்கள் ஆகியவை உள்ளன. கோவை மத்திய சிறையை இடமாற்றிவிட்டு, அங்கு செம்மொழிப்பூங்கா அமைக்கப்படும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்