
பழநி: பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் நிச்சயம் தோல்வி அடைவார் என்று பழநியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
பழநியில் பழனி கோயிலின் பாரம்பரியத்தை பாதுகாத்திட வேண்டும் என்றுகூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று (ஜூலை 13) இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். பழநி ஒன்றிய செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார். மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், நகர செயலாளர் கந்தசாமி, காங்கிரஸ், மதிமுக, விசிக, தமுமுகவினர் கலந்து கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்