
மதுரை: அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றுவது தொண்டர்களுக்கு வேதனையை கொடுக்கும். கொடி மற்றும் பீடத்தின் அளவு குறித்து விதிமுறைகளை வகுக்கலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் எஸ். மேலப்பட்டி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இரு கொடிக் கம்பங்களை அகற்ற பேரையூர் வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கருப்யையா, வைரமுத்து ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்