
மதுரை: மதுரை அருகே திருமோகூரில் சில தினத்துக்கு முன் கோயில் திருவிழா நடந்தது. இதையொட்டி நடந்த கலை நிகழ்ச்சியின்போது, இரு தரப்பு இளைஞர் களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறில் ஈடுபட்டவர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அன்றிரவே அப்பகுதியிலுள்ள ஒரு தெருவுக்குள் புகுந்த கும்பல், 30க்கும் மேற்பட்ட டூவீலர்கள், கார் ஒன்றை அடித்து நொறுக்கியது. இந்த தாக்குதலில் 3 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக மற்றொரு தரப்பைச் சேர்ந்த சிறுவர்கள் உட்பட 23 பேரை ஒத்தக்கடை போலீஸார் கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்